அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக இலங்கை தமிழ் இளைஞர்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரிப் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஹரி பிரதீபன் என்பவரே இவ்வாறு அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு அவுஸ்திரேலியா படைப் பிரதானிகள் விருது வழங்கி கௌரவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் சிறுவயதில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைக்கு தெரிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஹரி பிரதீபனின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin