வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்து இளம் பெண் பலி

வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எவ்வாறாயினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வவுனியா நாகர் இலுப்பைக் குளத்தினை சேர்ந்த ஜன்சிகா (வயது 17) என்று சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது தவறுதலாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: admin