வரி அதிகரிப்பு எரிபொருள், தங்கத்தின் விலை உயரும்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தொலைபேசிகள், சோலார் பேனல்கள், பிக்மி மற்றும் உபேர் போக்குவரத்து சேவைகள், எரிபொருள் மற்றும் தங்க நகைகளின் விலைகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக இந்த நாட்டில் எரிபொருளின் விலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும் இந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் (காற்று/சூரிய சக்தி) மின்சார உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேசப்பட்டாலும், சோலார் பேனல் ஒன்றின் விலை இரண்டு இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு நழுவப் போவதாகவும், அடுத்த ஆண்டும் அதிக விலையுள்ள எரிபொருள், நிலக்கரி போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோலார் பேனல்களின் விலையை குறைக்கவே செய்ய வேண்டும், ஆனால் இதுவரை இல்லாத வற் வரி காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் முடங்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin