தற்காலிகமாக மூடப்பட்டது புறா தீவு

வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் கடலில் சூறாவளி போன்ற தொடர் இன்னல்களால் திருகோணமலை நிலாவெளி தேசிய பூங்காவின் புறா தீவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

படகு மூலம் தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி இறுதி இவ் அறிவித்தல் நீடிக்கும் என்றும், இதற்கிடையில் கடல் நிலை சாதாரணமாக இருக்கும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படலாம் என்றும் புறா தீவு பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin