ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் ஏல கணிப்பு

17-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் லீக் அடுத்த ஆண்டு மார்ச் – மே மாதங்களில் நடத்தப்படுகிறது.

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடக்கிறது.

ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஐ.பி.எல். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு விலை போவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான அஸ்வின் கணித்துள்ளார்.

அதன்படி அவுஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீரர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் ரூ.14 கோடிக்கு மேல் ஏலம் போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த அதிரடி வீரர் ஷாருக்கான் ரூ.10 முதல் 14 கோடிக்கு விலை போகலாம் என்று அஸ்வின் கணித்துள்ளார்.

ஹர்ஷல் படேல் ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், சச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும், கோயட்சே (தென்ஆப்பிரிக்கா) ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், போவெல் (வெஸ்ட் இண்டீஸ்) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும் விலை போகலாம் என்றும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin