உயர்தர பரீட்சையில் தமிழ் மொழி மூலம் மட்டக்களப்பு மாணவன் சாதனை!

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் முதலாம் இடத்தினைப்பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியை சேர்ந்த தமிழ்வாணன் துவாரகேஸ் என்ற மாணவன் உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளார்

சாதனை படைத்த மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள்
இதனையடுத்து இன்று அவரது இல்லத்திற்கு சென்று கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் ஆகியோர் சாதனை படைத்த மாணவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor