யாழில் போதை பொருள் வியாபாரி கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று கோண்டாவில் ரயில் நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்யும் 27 வயதுடையவரே முதன்மை சந்தேகநபரே நீண்ட நாட்கள் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor