அவசர உதவியை கோரும் சிராட்டிக்குள கிராமம்

சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு சிராட்டிகுளம் கிராம மக்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் 67 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிராட்டிகுளம் கிராம குதியில் பறங்கியாறு பெருக்கெடுத்த நிலையில் மக்கள் எவ்வித வெளித்தொடர்புகளின்றி பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வீடுகளிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

“சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதுடன், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

வீடுகளின் சுவர்கள் இடிந்து விழும் தருவாயில் இருப்பதால் குறித்த பகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.

மேலும் வைத்தியசாலை தேவைகளைக்கூட தம்மால் நிறைவேற்ற முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றோம்” என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin