5 பைனலிஸ்டுடன் மோதும் இலங்கை கில்மிஷா!

குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.

சரிகமப சீசன் 3 நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது.

ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான சுற்றுகளை விறுவிறுப்பாக நடத்தி குழந்தைகளின் திறமையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் என நான்கு பேர் இதுவரை பைனலுக்கு தேர்வாகியுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீ ஸ்டைல் ரவுண்டு மூலமாக நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவ்வாறாக மொத்தம் 6 போட்டியாளர்களுடன் அனல் பறக்கும் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி வரும் 17ம் திகதி நேரடி ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை நேரில் காண ஆசைப்படுபவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நடுவர்களின் மதிப்பெண்கள் மட்டுமின்றி மிஸ்டு கால் மூலமாக மக்களின் ஓட்டுகளை வைத்து வெற்றியாளரை தேர்வு செய்யும் வகையில் இந்த கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 6 போட்டியாளர்களில் டைட்டிலுடன் 10 இலட்சம் ரூபாய் பரிசு தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin