பதிவியில் தொடர மஹேல முடிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக பணியாற்றும் மஹேல ஜயவர்தன தொடர்ந்தும் அந்த பதவியில் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மஹேல ஜயவர்தன, கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்தித்த தோல்விகள் குறித்து கலந்துரையாடியுள்ள அவர், அணியின் முன்னேற்றத்திற்கான எதிர்காலத் திட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மஹேல ஜயவர்தனவின் ஒப்பந்த காலம் முடிவடைய இன்னும் மூன்று மாதங்களே உள்ளது. என்றாலும் அவர் பதவி விலக மாட்டாரென கிரிக்கெட் சபை வட்டாரங்களில் அறிய முடிகிறது.

Recommended For You

About the Author: admin