வடிவேல் சுரேஷுக்கு மேலுமொரு பதவி

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார்.

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி தெரிவித்துள்ளது.

இதன்படி, அந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளின் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசகராகவும் வடிவேல் சுரேஷ் அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin