லண்டன் ரயிலில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்.

லண்டன் ரயிலில் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேற்கு லண்டனின் லாட்ப்ரோக் க்ரோவ் பகுதியில் மேல்நிலை மின்சார கேபிள்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக எலிசபெத் லைன் ரயிலில் மின்சாரம் இல்லாமல் பெண் பயணி உள்ளிட்ட பல பயணிகள் நான்கு மணி நேரம் தவித்த சம்பவம் வியாழக்கிழமை இரவு அரங்கேறியது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒரு நபர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், அதன் பிறகு காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

மேலும், மின்தடையின் போது இருவர் காயமடைந்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை பிரிட்டன் போக்குவரத்து பொஸிசார் உறுதிசெய்த நிலையில் அது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin