140 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்: 104 பேர் மீண்டும் கைது

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 140 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 104 பேர் இதுவே கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் 21 பேர் பொலிஸாரினால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கைதிகள் சிலர் நேற்றையதினம் (11) தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, சுமார் 50 கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ஏனைய கைதிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களின் போது கைதிகள் இவ்வாறு தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin