IPL ஏலம் அடுத்த வாரம்

2024 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஏலத்திற்கு 333 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் 214 பேர் இந்திய வீரர்கள்.

அத்துடன், ஏல நடவடிக்கையில் பங்கேற்கவுள்ள 119 வெளிநாட்டு வீரர்களில் 8 இலங்கை வீரர்கள் உள்ளடங்குகின்றன.

இந்த நிலையில், இலங்கை வீரர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச ஏலத்தொகை 1.5 கோடி ரூபாவாகும்.

குறித்த தொகைப் பிரிவில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க பங்கேற்கவுள்ளார்.

ஏனைய 7 வீரர்களும் 50 இலட்சம் இந்திய ரூபா பிரிவில் இம்முறை ஏலம் விடப்படவுள்ளனர்.

இதன்படி, குசல் மெண்டிஸ், துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, தசுன் சானக்க, சரித் அசலங்க, லஹிரு குமார மற்றும் நுவன் துஷாரா ஆகியோர் இந்த பிரிவில் இடம்பிடித்துள்ள ஏனைய வீரர்களாகும்.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 19 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin