யாழில் பசு கன்று குட்டி அடித்து கொலை!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக 3 மாதங்கள் நிரம்பிய கன்று குட்டியினை அடித்துக்கொலை செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து மனைவியின் சகோதரன் இந்த வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளார்.

இதன் காரணமாக கணவரின் தரப்பினர், பிரச்சினையில் தலையிட்ட மனைவியின் சகோதரனின் வீட்டுக்கு சென்று அங்கு நின்ற 3 மாதங்கள் நிரம்பிய கன்று குட்டியினை அடித்துக்கொலை செய்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor