யாழில் மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதைப்பொருள் விற்பனை

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வந்த மாவா போதைப்பொருளுடன் யாழில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு அருகில் விற்பனையில் ஈடுப்பட்டிருந்த வேளையிலேயே யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப்பொருள் சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும்நிலையில் குறித்த சந்தேகநபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என யாழ்ப்பாண பிராந்திய குற்றதடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin