மீள முடியாமல் தவிக்கும் விஜய் ஆண்டனி மனைவி

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இரண்டு மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் மகள் பிரிவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் விஜய் ஆண்டனியின் மனைவியும், மீராவின் தாயுமான பாத்திமா தவித்து வருகிறார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீரா தங்கம் உன் பியானோ உன்னுடைய தொடுதலுக்காக காத்திருக்கிறது மற்றும் ஏங்குகிறது, நீ எங்களை விட்டு சீக்கிரம் சென்றுவிட்டாய்.

இந்த உலகம் உனக்கானது இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அம்மா இன்னும் இங்கே இருக்கிறேன்.

நான் உன்னைச் சந்திக்கும் வரை நன்றாகச் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin