பிறப்பு எண்ணிக்கையில் சரிவு

நாட்டில் பிறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவு அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, இவ்வருடம் ஜூலை முதலாம் திகதி வரையான வருடத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 268,920 ஆக குறைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை 275,321 என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில்இ பிறப்புகளின் எண்ணிக்கை 284,848 ஆகவும், 2020 இல் 3 இலட்சத்திற்கும் அதிகமான பிறப்புகள் பதிவாகியுள்ளன.

இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிறப்பு பதிவு 6,401 ஆக குறைந்துள்ளதுடன், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41,786 பிறப்புகள் குறைந்துள்ளது.

பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள், பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள், உலகளாவிய தொற்றுநோய்கள் போன்ற காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin