ஜனாதிபதி ரணிலின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து அண்மையில் தீர்மானித்தது.

வடிவேல் சுரேஷ் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகளை பாராட்டி பேசியிருந்தார்.

அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin