மாணவர்களிற்க்கான மேலதிக வகுப்புகளை தடை செய்ய கோரிக்கை!

ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகளை தடை செய்யுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையானது கலாசார அமைச்சரிடம் நேற்று (06.12.2023) நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் மகிந்த அமரவீரவினால் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,

பெரும் தடை
”ஞாயிறு காலை தம்ம பாடசாலை நடத்துவதற்கு இந்த மேலதிக கல்வி வகுப்புகள் பெரும் தடையாக உள்ளது.

அதனை தடை செய்து தம்ம பாடசாலைகளை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த தம்ம பாடசாலை அத்தியாவசியமானது. அதைச் செய்ய நேரம் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகளை தடை செய்யுமாறு என அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்

Recommended For You

About the Author: webeditor