3 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்க முயன்ற ஒருவர் கைது

பதுளை விஹாரகொட பிரதேசத்தில் வலம்புரி ஒன்றினை 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் நேற்று (05) இரவு நுவரெலியா விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை – கிரீன்லேன் ட்ரைவ் வீதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் வலம்புரி ஒன்றை விற்பனை செய்ய தயாராகி வருவதாக நுவரெலியா விசேட அதிரடிப்படை முகாம் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு
அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin