யாழ் மீசாலையில் குடும்பஸ்தர் மீது உழவு இயந்திரம் ஏறியதில் படுகாயம்!

யாழில் உழவு இயந்திர பெட்டியின் சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் யாழ். சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி
உழவு இயந்திர பெட்டிக்கு கீழே தந்தை படுத்திருந்ததை அறியாத மகன் உழவு இயந்திரத்தை இயக்கியபோது சக்கரம் தந்தையின் இடுப்பு பகுதியில் ஏறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor