யாழில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் தீயில் கருகி சாம்பலாகின!

சற்றுமுன்னர் யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் மூன்று கடற்றொழில் வாடிகள் தீக்கிரையாகியுள்ளது.

குறித்த வாடிகள் தீயில் எரிவதை பார்த்த மீனவர்கள் அதை அணைக்க முற்பட்ட முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மூன்று வாடிகளும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

சிறு தொழிலாளர்களின் சுமார் ஒரு கோடி பெறுமதிக்கு அதிகமான வலைகளும் மீன்பிடி உபகரணங்களுமே எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்வா, மரியசீலன், ராசன் ஆகிய மீனவர்களின் வாடியே இவ்வாறு தீயில் எரிந்துள்ளது.

குறித்த வாடிகள் எரிந்து நாசமாகியுள்ளதற்க்கான. காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் குறித்த தீ சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor