யாழில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கழுத்தறுத்துகொலை!

யாழ்.உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஓய்வுநிலை ஆசிரியரான எஸ்.செல்வராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

ஆசிரியையின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் வீட்டினுள் சென்று பார்த்தபோதே குறித்த ஆசிரியை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதோடு அவரது கழுத்து வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் , திருட்டு நோக்கத்திற்காக ஆசிரியை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: webeditor