கிளிநொச்சியில் அதிரடி காட்டிய பொலிசார் சிக்கிய லொறிகள்

கிளிநொச்சி – கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணாக வீதியில் மணல் ஏற்றி பயணித்த ஆறு டிப்பர் லொரிகள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்புபதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor