யாழில் இளையோரை குறி வைக்கும் போதை விருந்து தொடர்பில் சுகாஸ் எச்சரிக்கை!

யாழில் இளைஞர்களை குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் வெளியிட்டுள்ள x (டுவிட்டர்) பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழில் இளைஞர்களை குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் வெளியிட்டுள்ள x (டுவிட்டர்) பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

யாழில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் (வெறியாட்டம்) ஒருபோதும் ஏற்கமுடியாது. சம்பந்தப்பட்ட தனியார் விடுதியும் சமூகப் பொறுப்பற்றுச் செயற்படும் ஏனைய ஒருசில விடுதிகளும் தாம் சார்ந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கோலங்களுக்கு அமைவாகச் செயற்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான போதை வெறியாட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தால், மக்களைத் திரட்டி குறித்த போதை மையங்களை முற்றுகையிட வேண்டி ஏற்படலாம் எனவும் அவரது x பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor