யாழில் சிறப்பாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் NVQ கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழில் இன்று நடைபெற்றது.

இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ், கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் நிரஞ்சன் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் எயார் மார்ஷல்(ஓய்வுபெற்ற) பிரசன்ன ரணசிங்க, சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர்  சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொழிற்பயிற்சி அதிகார சபையின் NVQ கற்கைநெறியைப் பூர்த்தி செய்த சுமார் 500 வரையான மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Recommended For You

About the Author: S.R.KARAN