உலக நீரிழிவு தின விழிப்பூட்டல் செயலமர்வு

உலக நீரிழிவு தின விழிப்பூட்டல் செயலமர்வு கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியில் நாளை 15. 11. 2023 புதன்கிழமை காலை 08. 00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் நீரிழிவு பற்றிய அறிமுக உரையினை யாழ் நீரிழிவு கழகத் தலைவர் தி. மைக்கல் வழங்குவார்.

அதனைத் தொடர்ந்து ” நீரிழிவால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளும் தீர்வுகளும் ” எனும் தலைப்பில் கண் சத்திர சிகிச்சை நிபுணர், வைத்தியர் எம். மலரவன், “நீரிழிவால் நரம்பு தொகுதி பாதிப்பும் தீர்வுகளும் ” எனும் தலைப்பில் நரம்பியல் நிபுணர், வைத்தியர் கே. அஜந்தா, “நேரிழிவால் சிறுநீரக பாதிப்பும் தீர்வுகளும் ” எனும் தலைப்பில் சிறுநீரக நிபுணர், வைத்தியர் பிரம்மா, ஆர். தங்கராஜா, “நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகளும் தீர்வுகளும் ” எனும் தலைப்பில் விசேட வைத்திய நிபுணர், வைத்தியர் எம். அரவிந்தன், “நேரிழிவால் ஏற்படும் பாதிப்பும் அதற்கான தீர்வுகளும் ” சத்திர சிகிச்சை நிபுணர், வைத்தியர் எஸ். ரவிராஜ், “நிறையுணவின் அவசியம் ” விசேட வைத்தியர் ( போசனை பிரிவு ) சி. ரம்மியா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN