இரு மாத்திரைகளை உட்கொண்ட சிறுமி உயிரிழப்பு!

பாடசாலை மாணவி ஒருவர் இன்று (10.11.2023) காலை இரண்டு மாத்திரைகளை விழுங்கியதால் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி – பலப்பிட்டிய மரதான பிரதேசத்தில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய வலிமுனி டினுஜி மௌவிஸ்ம மென்டிஸ் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சுகயீனமுற்ற மாணவி

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த சிறுமி வீட்டில் இருந்து இரண்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தியதால் மாணவி உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று (10.11.2023) பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி திருமதி கே.கவாகராச்சியினால் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor