நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தினை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், 31 ஆயிரத்து 105 நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதம் முதல் திகதி முதல் இதுவரையில் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 775 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அடுத்து சுற்றுலாப்பயணிகளின் வருகை வெகுவாக குறைவடைந்து நிலையில் தற்போது மீண்டும் அவர்களின் வருகை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor