யாழ் பல்கலையில் மாவீரர் நினைவு தூபியில் ஏற்றப்பட்ட ஈகை சுடர்

கார்த்திகை மாதம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை ஈடுபட்டனர்.

அதன்பின் தூபியில் மாவீரர் நினைவுத்தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர். தமிழின விடிவுக்காய் தம் உயிர்களை ஈந்த மாவிரர்கள் நாள் நவம்பர் 27 ஆம் திகதி அனுடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு மல்லாவி பகுதியில் அமைந்துள்ள வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல துப்புரவு பணிகள் துயிலும் இல்ல நிர்வாகத்தினரால் இன்றைய தினம்(02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: webeditor