யாழில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு! வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ். குடாநாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போய் உள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

யாழ்.நகர்ப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்குச் செல்லும் பொழுது இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

 

தமது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் உரிமையாளர்கள் மிக அவதானத்துடன் செயல்படுவதுடன் மோட்டார் சைக்கிளின் பாதுகாப்பினை ஒன்று இரண்டு தடவைகள் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

குறிப்பாக காண்டில் லொக்கினைப் பயன்படுத்திவிட்டு செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை,திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் உதிரிப் பாகங்களாக மாற்றி விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஒரு சில கும்பல்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

 

இத்தகைய கும்பல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு 021222 2222 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல் தெரிவிக்க முடியுமெனவும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

Recommended For You

About the Author: S.R.KARAN