கொழும்பில் தீ பரவல்

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் ஷங்ரிலா ஹோட்டலுக்கும் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கும் இடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு படையினர் தீவிரமாக செயற்பட்ட நிலையில் தற்போது தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புபடையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor