யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டடம் நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்திற்கு முன்பாக நேற்று இரவு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்ஷகர் மொஹான் கருணாரட்ன தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் 8 ஆவது வருட பூர்த்தியை குறிக்கும் முகமாக தயாரிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ்.சிறைச்சாலை மூத்த அதிகாரிகள், சிறைச்சாலை அலுவலர்கள்,சிறைச்சாலை காவலர்கள் பங்குபற்றினர்.

 

Recommended For You

About the Author: S.R.KARAN