அண்ணாமலையுடனான சந்திப்பில் திருமாவளவன் நெகிழ்ச்சி

மேல்மருவத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் விசிக தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மிக தலைவருமான பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி விசிக தலைவர் திருமாவளவன், பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்மீகத் தளத்தில் சமூக நீதியை நிலைநாட்டிய பங்காரு அடிகளாரின் மறைவு சமூக நீதியில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஒரு பேரிழப்பாக உள்ளது என்று தெரிவித்தார்

மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பே கோயில் கருவறைக்குள் பெண்களை அனுப்ப முடியும், பூஜை செய்ய முடியும் என சிந்தித்து அதை செயல்படுத்தி காட்டிய மகத்தான சமூக நீதி போராளியாக அடிகளாரை பார்க்கிறோம் என்றார். அவருடைய மறைவு நாளில் தன்னால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் மேல்மருவத்தூரில் இருந்து திரும்பும் வழியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் திருமாவளவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin