நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச் சொற்பொழிவு

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.

 

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 27.10.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெறவுள்ளது.

ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர் த.சோதிலிங்கம் தலைமையுரை ஆற்றுவார்.

சிறப்புச்சொற்பொழிவினை சைவப்புலவர் சி. கா. கமலநாதன் அவர்கள் ” அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உணர்த்தும் வாழ்வியல் ” விடயப்பொருளில் சிறப்புச்சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

Recommended For You

About the Author: S.R.KARAN