தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்டம் 17 வயதுப் பிரிவில் தெல்லிப்பழை மஹாஜனா சாம்பியன்!

தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்ட போட்டியில் 17 வயதுப் பிரிவில் தெல்லிப்பழை மஹாஜனா சாம்பியன்!

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி சாம்பியனாகியுள்ளது.

இப்போட்டி இன்று 09.10.2023 திங்கள் காலை 9.30 மணிக்கு யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் குருநாகல் கவுசிகம மத்திய கல்லூரியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. மகாஜனா முதல்பாதி ஆட்டத்தில் 1 கோலையும் இரண்டாவதுபாதி ஆட்டத்தில் 2 கோல்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin