இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையின் கடற்படை மற்றும் விமான படைக்கு எரிபொருள் வழங்குவதற்கு, இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைகிறது.

இந்திய பெருங்கடலை பாதுகாத்தல்

இது நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான நீண்டகால ஒத்துழைப்பு தொடர உதவும்.

அத்துடன் இந்திய பெருங்கடல் பகுதியில் அண்டை நாடுகளாக, பிராந்திய பாதுகாப்பை பாதுகாப்பதில் மூன்று நாடுகளும் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன என்று கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor