முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய நாட்டுக்கு வருவதில் தாமதம்!

தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை வருகின்றார் என்றும், ஆனால் அவர் 24ம் திகதி இலங்கை வரமாட்டார் என அவரது அந்தரங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 24ம் திகதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை வருகின்றார் என்ற தகவல் உண்மையில்லை ஆனால் அவர் இலங்கை வரவுள்ளார் என சுகீஸ்வரபண்டார தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் பாதுகாப்பு

இலங்கை திரும்பியதும் அவர் அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கு இந்த விடயம் குறித்து தன்னால் கருத்துகூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கோட்டாபயவின் பாதுகாப்பாக வருவது குறித்து மாத்திரமே கவனம் செலுத்தப்படுவதாகவும் அந்தரங்க செயலாளர் தெரிவித்துள்லதாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor