மட்டக்களப்பு மாவட்டத்தில் பசு தாக்கியதில் நபரொருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (21) வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை கிராமத்தில் களுதாவளையைச் சேர்ந்த 69 வயதுடைய நாகமணி பாக்கியராசா என்பவரை கறவைப் பசு தாக்கியதில் பலியானதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று வழமைபோன்று 15 நாட்கள் கன்று ஈன்ற தனது மாட்டில் பால் கறந்து கொண்டிருக்கும் போது மாடு திடீரென நெஞ்சுப் பகுதியில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை யில் தெரிய வந்துள்ளது.

மரண விசாரணை

களுவாஞ்சிகுடி நீதிமன்ற பதில் நீதிவானின் உத்தரவுக்கமைவாக சம்ப இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor