சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள வேண்டுகோள்!

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக மிகவும் கொடுரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தக்கூடாது எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலால் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை தன்னிச்சையாக கைதுசெய்வதும் அவர்களின் நடவடிக்கைளால் நியாயப்படுத்த முடியாத பாரிய குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்துவதும் சர்வதேச சட்டத்திற்கு முரணாண விடயம் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor