கனடாவில் திருமண நிகழ்வு ஒன்றில் நிகழ்ந்த சோகம்!

கனடாவில் திருமண நிகழ்வு ஒன்றின் இடைநடுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் மேற்கு வான்கூவார் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமண விருந்துபசாரமொன்று நடைபெற்று கொண்டிருந்த வேளையில் பெண் ஒருவர் வாகனத்தைச் செலுத்தியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வாகனத்தை கட்டுப்பாடின்றி செலுத்தியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு 11 நோயாளர் காவு வண்டிகளும் உலங்கு வானூர்திகளும் வரவழைக்கப்பட்டு காயமட்டைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor