யாழில் 22 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் 22 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ் தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் கே.கே.எஸ் பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய இருபத்திரெண்டு வறிய நிலை குடும்பங்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவியாக, குடும்பம் ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபா படி(2000)மொத்தம் நாற்பத்தி நான்காயிரம்(44,000.00)பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்(30/08/2023) அன்று,கே.கே.எஸ்,ஜே/235 கிராம சேவையாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கெளரவ கலாநிதி திரு ந.விந்தன் கனகரட்ணம், சமூக சேவையாளரும் அறக்கட்டளையின் ஆலோசகருமான இ.மயில்வாகனம்,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை கிளையின் நிர்வாகசபை உறுப்பினரும் பொறியியலாளருமான சா.தவசங்கரி,கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சி.தனுஷியா ஆகியோர் பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN