ரயிலுடன் மோதிய லொறி

கந்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து சம்பவம் இன்று (28) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறியின் பின் பகுதியில் ரயில் மோதுண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ரயில் சேவைகள் வழமையாக இயங்குவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor