சிறுவர் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விளிப்புணர்வு வேலைத் திட்டங்கள்

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில்
விழிப்பூட்டும் சிறுவர் நல வேலைத்திட்டங்களை
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதற்கமைவாக நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் மாவட்ட ரீதியிலான இவ் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

“ஒரு நாளில் உன்னை மகிழ்விப்போம் “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மதுரங்கேணிகுளம், குஞ்சங்குளம் ஆகிய கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகதருக்கான மாவட்ட இணைப்பாளர் வீ. குகதாசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரனின் வழிகாட்டலில் பிரதேசசெயலாளர் க.அருணன் தலைமையில், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஐ் ஏற்பாட்டில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது .

இந்நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாகரை ஆதிவாசிகள் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வாழும் சிறுவர்களுகள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களின் பாதுகாப்பு , சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்தல் , வீட்டை அடிப்படையாக கொண்ட பராமரிப்பின் முக்கியத்துவம் , திணைக்களத்தினுடைய மாற்றுப் பராமரிப்பு தேசிய கொள்கை திட்டம் , சிறுவர் பங்கேற்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு சிறுவர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய சகலவிதமான துன்புறுத்தல்களையும் குறைக்கும் அல்லது தடுக்கும் வகையிலாக சமூக மட்டத்திலே கட்டமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும் வகையில்
“கிராமிய மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு “ மற்றும் “சிறுவர் கழகங்களை “ மீளமைப்புச் செய்வதும் , சிறுவர்களுக்கான படைப்பாக்க திறன் மற்றும் வாழ்க்கைத்தேர்ச்சி சம்பந்தமான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும்
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற இந்நிகழ்வில் நூறு சிறுவர்கள் என பங்கு பெற்றிருந்தனர். அனைத்து சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டனர்.

இது போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களை
ஒருங்கிணைத்து ஒவ்வொரு பிரதேச செயலகமாக சென்று அங்கு காணப்படும் பின்தங்கிய கிராமங்களில் இந் நிகழ்வை நடாத்த
திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor