”அருவமும் உருவமாகி ” நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

”அருவமும் உருவமாகி “நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 25.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர் த.சோதிலிங்கம் அவர்கள் தமையுரை ஆற்றினார்.

சிறப்புச்சொற்பொழிவினை சைவப்புலவர் பொன். சந்திரவேல் அவர்கள் ”அருவமும் உருவமாகி ” என்னும் விடயப்பொருளில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது.

சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன .

இறுதியில் ஆலய பிரதம குருக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் சொற்பொழிவாளர் சைவப்புலவர் பொன் சந்திரவேல் அவர்கள் ” சிவப்பணி வித்தகர் ” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Recommended For You

About the Author: S.R.KARAN