வவுனியா இரட்டை கொலை வழக்கில் சிக்கிய வாகனங்கள்

வவுனியா- தோணிக்கல் பகுதியில் கடந்த (23.08.2023) ஆம் திகதி அதிகாலை வேளையில் வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புப்பட்ட பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும் .

அதேவேளை இக் கொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாகனம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது டிப்பர், பட்டா ரக வாகனம் மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் என்பன குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரணை பிரிவினரால் நேற்று (16.08.2023) மாலை வேளையில் மீட்கப்பட்டுள்ளன.

குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரணை பிரிவினரின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மொடில் ரஞ்சலமரகே அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக செயற்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ் கான்ஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து வாகனங்களை கைப்பற்றி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor