கொக்கிராவ மலசல கூடத்தில் வெடி விபத்து!

கெக்கிராவ மலசலகூடத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ பிரதேச செயலாளரின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திலேயே இப் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பு சம்பவத்தின் போது பிரதேச செயலாளர் அவரது அலுவலகத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தெரிவித்தது
வெடிவிபத்தில் பிரதேச செயலாளருக்கோ அல்லது ஊழியர்களுக்கோ காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிவிபத்தில் கழிவறையின் பாகங்கள், ஜன்னல்கள் உட்பட பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாரத்தின் ஆரம்ப நாளான திங்கட்கிழமை (07) மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வந்து இந்த நிரப்பும் போது அலுவலக வளாகத்தில் இருந்துள்ளதுடன் பிரதேச செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor