கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் நடைபெறும் காலம்
அந்த வகையில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறுமென குறிப்பிட்டுள்ளார்.

மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 2024இன் முதல் காலாண்டிலும் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor