இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பந்துவீச்சாளர் பிரவீன் குமார் கார் விபத்தில் உயிர் பிழைப்பு!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பந்துவீச்சாளர் பிரவீன் குமார் கார் விபத்துக்குள்ளானதில் அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு (04-07-2023) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது மகனுடன் உத்திர பிரதேசம் மாநிலம் பாண்டவ் நகரில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தபோது மீரட் என்ற இடத்தில் எதிரே வேகமாக வந்த டேங்கர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் பிரவீன் குமாரும், அவரது அவரது மகனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதேவேளை, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கேன்டர் சாரதியை கைது செய்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor